எக்காளத்தை உன்வாயில்வை

 

 

எக்காளத்தை உன்வாயில்வை

எச்சரிப்பின் சத்தம் எழுப்பி(2)

சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு

வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு!

 

வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்

போதித்து களிகூறும் நாட்களிது

வேறொரு சுவிஷேசம் தொனிக்கின்றதே

ஜனத்தை காத்திட எழும்பிவ(2) - எக்காளத்தை

 

வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்

எங்கும் செயல்படும் நாட்களிது

அஸ்திபாரங்கள் அசைகின்றதே

திறப்பில் நின்றிட எழும்பி வா (2) - எக்காளத்தை

 

அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்

கவர்ந்து இழுத்திடும் நாட்களிது

பனிபோல பக்தி மறைகின்றதே

வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா - எக்காளத்தை