எங்கும் நிறைந்திருப்பவரே
எங்கும் நிறைந்திருப்பவரே
எல்லாம் அறிந்தவர் நீரே
சர்வ வல்லவர் நீரே
எங்கள் தேவனும் நீரே
எங்கள் ராஜனும் நீரே
உமக்கே ஆராதனை
எங்கள் எல்ரோஹி தேவன் நீரே
உமக்கே ஆராதனை
என்னை நித்தம் நீர் காண்பவரே
உம் ஆவிக்கு மறைவாக
எங்கே நான் போவேன் ஐயா
உம் சமூகத்தை விட்டு விட்டு
எங்கே நான் ஓடிடுவேன்
ஒருநாளும் முடியாதையா
எந்நாளும் கூடாதையா - உமக்கே
என்னை நீர் ஆராய்ந்து
எந்தன் நினைவுகளை அறிவீர்;
என்னை நீர் சூழ்ந்துகொண்டு
எந்தன் வழிகளை அறிகின்றீர்
உம்அறிவு ஆச்சரியமே
எனக்கெட்டாத உயரமே - உமக்கே