எந்தன் ஆயுள் எல்லாம்
எந்தன் ஆயுள் எல்லாம்
என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே
என்னை நடத்தும் ஐயா
நன்றியால் துதி பாடுவேன்
நன்மைகள் செய்தவரை
நாவினால் துதி பாடுவேன்
சுவாசம் உள்ளவரை
கருவினில் என்னை தெரிந்தவர் இயேசு
தெருவினில் என்றும் விடுவதே இல்லை
தாழ்வினில் என்னை கண்டவர் இயேசு
தாழ்ந்து நான் போகவே செய்திடமாட்டார்
உள்ளங்கையினில் வரைந்தவர் இயேசு
என்னை என்றும் மறப்பதே இல்லை
என்மேல் நினைவாய் இருப்பவர் இயேசு
என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்
பெயர்சொல்லி என்னை அழைத்தவர் இயேசு
பெரியவனாக்கி பெயர் பெறச்செய்வார்
உண்மையுள்ளவன் என்று கண்டவர் இயேசு
உயர்வாய் என்னை வாழ்ந்திட செய்வார்