என் இயேசுவே என் மணாளா

 

 

என் இயேசுவே என் மணாளா

இணையில்லாத அன்பின் ஊற்றே

ஏன் இந்த கோபம்

உம் ஜனங்கள் மேலே

நினைக்கும்போது துயரமையா

என் இயேசுவே!

 

திரும்பும் திசையெல்லாம்

மரண ஓலங்கள்

கோரக  ொள்ளைநோய்

அலையாய் வருதே

என் தேவ தேவ தேவனே

உம் இரக்கத்திற்காய் கெஞ்சுகிறேன்

என் இயேசுவே!

 

ஜனத்தின் வேதனையால்

அழுது புலம்பிடுவேன்

உமக்கும் ஜனத்திற்கும்

நடுவில் நிற்ப்பேன்

என் தேவ தேவ தேவனே

என் கதறல் சத்தம் கேட்குதா?

என் இயேசுவே!

 

அறியவும் அறிவிக்கவும்

தீர்க்கனும் இல்லையே

சபைகள் அருவருப்பாய்

மாறினதே

என் தேவ தேவ தேவனே

எங்கள் பாவத்தை மன்னியுமே

என் இயேசுவே!