நமக்கொரு பலிபீடம்
உண்டு
நமக்கொரு பலிபீடம்
உண்டு
நம் இயேசுவின்
சிலுவையது
பாவமறியாதவர் பாவமானார்
பலிகடாவாகி உன்னை
இரட்சித்தாரே
எருசலேமின்
நகரவாசலின்
புறம்பே
சிலுவையை
சுமந்து செல்கின்றார்
அவரின்
நிந்தையை
நாம் சுமந்து
அவரின்
பாதம் பின்சென்றிடுவோம்
சிலுவையைத் தோள்மேலே
சுமக்கும்போது
சிந்தை முழுவதும்
உன்னைவைத்து
ஒரே பலியாக
உனக்காக மாறி
உன்னை மீட்டெடுத்திட்டாரே - எருசலேம்
வாரினால் அடிகள்
வாங்கும்
போது
நோயினால் வாடும்
உன்னையெண்ணி
தழும்புகளைத் தன்னில்
ஏற்று
உன்னைக் குணமாக்கினாரே
- எருசலேம்
ஈட்டியினால் விலாவைக்
பிளக்கும்போது
மணவாட்டி உன்மேல்
காதல்கொண்டு
இரத்தமும் தண்ணீரும்
ஊற்றிக்கொடுத்து
உன்னைச் சொந்தமாக்கினாரே
- எருசலேம்;