நான் பயப்படும் நாளில்

 

 

நான் பயப்படும் நாளில்

கர்த்தரை நம்புவேன்

நான் கலங்கிடும் போதும்

அவர் முகம் நோக்குவேன்

 

              

ஏக்கங்கள் எல்லாம் அறிந்தவர்

கண்ணீரைக் காண்பவர்

அவர் என் பட்சம் இருப்பதால்

கவலைகள் எனக்கு இல்லையே

 

               பயப்படும் நேரத்தில் நான்

               அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன(2)     

 

தேவைகள் எல்லாம் அறிந்தவர்

என்நிலைமையை நன்கு புரிந்தவர்

அவர் என்னை காண்பதால் - நான்

தாழ்ந்து போவது இல்லையே

 

               பயப்படும் நேரத்தில் நான்

               அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன(2)     

 

வியாதின் வேதனை உணர்ந்தவர் - (எனக்கு)

விடுதலை தந்திட வல்லவர்

அவரே எந்தன் பரிகாரிநான்

சோர்ந்து போவது இல்லையே 

 

               பயப்படும் நேரத்தில் நான்

               அவர் முகம் நோக்கிப் பார்ப்பேன(2)